இறைவனை வழிபடுவது என்பது நம்மை பொறுத்தவரை கைகூப்பி வணங்கும் ஒரு முறை என்பதாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக ஒருவர் ஆலயம் சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்து வழிபாட்டில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இறைவனை வணங்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுவாக இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகையிலான வழிமுறைகளை நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த வழியில் சென்று இறைவனை வழிபட வேண்டும். அப்போது இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும். ஆனால் கடவுளை வணங்கும்போது பெண்கள் செய்யகூடாத சில காரியங்கள் உண்டு அவை என்ன என்பதை பார்ப்போம் .

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாக இதையெல்லாம் செய்யகூடாதாம். அதில், கடவுளை வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாக கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும்.

மேலும், பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும் போது கொண்டை போட்டுக் கொண்டோ அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்.

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.

இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.