நாளுக்கு நாள் நடக்கும் ச ம் ப வ ங் களை நம்மை வி ய ப் பில் ஆ ழ்த்திக் கொண்டு தான் இருக்கின்றன. நம்மையும் நம்ப முடியாதளவிற்கு இந்த உலகில் அதிகமான செய்திகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்தில், முதல் பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஹன்னாஹ் (32), ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஜேக் கிராஃப் (41) பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இருவரும் திருமணம் செய்துகொண்டபோது, அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஜேக் பெண்ணாக இருக்கும்போதே, தனது கரு முட்டைகளை உறையவைத்து சேகரித்து வைத்திருந்தார்.
அவற்றை பயன்படுத்தி அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள லவுரா என்ற வாடகைத்தாய் முன்வந்தார்.அதன் விளைவாக, ஏப்ரல் மாதம் அவர் மில்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதாவது இப்போது தந்தை ஸ்தானத்தில் இருப்பவரே, தாயாக தனது கருமுட்டைகளை பயன்படுத்தியுள்ளார்.
தற்போது தம்பதியரின் குழந்தை ஆசை நிறைவேறியுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதேவேளை, விஞ்ஞானிகளை மி ர ள வைத்து பிறந்த அழகிய குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயா ய் ப ர வி வருகின்றது.